'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிக்கும் முன்பே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்த போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குநர் ஒருவர் லாவண்யாவை தன்னிடம் போனில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அப்படி செய்தால் ஆறு மாதத்திற்கு பிறகு அவரது கேரியரையே வேறு லெவலுக்கு எடுத்துச்செல்வேன் என்று கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ந்தாலும், இந்த விவகாரத்தை இப்போது பெரிதாக்கினால் நமது எதிர்காலத்தை முடித்துவிடுவார்கள் என பயந்து அமைதியாகிவிட்டாராம். அதன்பிறகு அந்த இயக்குநரிடமிருந்தும் விலகிவிட்டாராம்.
லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் லாவண்யாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.