ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான சீரியல்களில் ஒன்று 'என்றென்றும் புன்னகை'. இதில், நக்ஷத்திரா ஸ்ரீநிவாஸ், கவிதா, நிதின் ஐயர், விஷ்னுகாந்த் மற்றும் சுஷ்மா நாயர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சீரியல், ஹீரோ தீபக் குமார் வெளியேறிய பின் சற்று தடுமாற ஆரம்பித்தது. இதனையடுத்து இந்த சீரியலுக்கான ஸ்லாட் இரவிலிருந்து மதியத்திற்கு மாற்றப்பட்டது. இந்த சீரியல் 565 எபிசோடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது நிறைவு பகுதிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் 'என்றென்றும் புன்னகை' தொடரின் கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாகும் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த வருத்ததில் உள்ளனர்.