'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
துல்கர் சல்மான் ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்கள் நடித்துவிட்ட நிலையில் தற்போது இயக்குனர் பால்கி டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.. இந்த நிலையில் அவரது படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர்கள் அரவிந்த்சாமியும், குஞ்சாக்கோ போபனும் ஒன்றாக விசிட் அடித்து படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.
விஷயம் இதுதான்.. அரவிந்தசாமியும் குஞ்சாக்கோ போபனும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியில் உருவாகி வரும் ரெண்டகம் {மலையாளத்தில் 'ஒட்டு'} என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படபிடிப்பும் துல்கர் சல்மான் படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகிலயே நடைபெற்று வருவதால் இப்படி திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்தனராம்.
அப்போது எடுத்துக்கொண்ட செல்பியை நடிகர் குஞ்சகோ போபன் தனது சோசியல் மிடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீனியர் சாக்லேட் ஹீரோக்களான அரவிந்த்சாமியும் குஞ்சகோ போபனும் ஜூனியர் சாக்லேட் ஹிரோவான துல்கர் சல்மானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த செல்பி தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.