அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகை சமந்தா, அவரது காதல் கணவர் நாக சைதன்யா பற்றி கடந்த சில வாரங்களாகவே விவகாரத்து சர்ச்சை எழுந்து வருகிறது. அது பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் நாக சைதன்யா நடித்து வெளிவர உள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலருக்கு சமந்தா வாழ்த்து கூறி அதற்கு நாக சைதன்யா பதிலளித்தார். அதைத் தொடர்ந்து அவர்களைப் பற்றிய சர்ச்சை செய்திகள், வதந்திகள் தற்போதைக்குக் குறைந்துள்ளன.
இதனிடையே, தனது நண்பர்களுடன் திருப்பதி பெருமாள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் சமந்தா. அவரிடம் ஒரு டிவி நிருபர் ஒருவர் உங்களைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருக்கிறதே எனக் கேட்டதற்கு சமந்தா, கோபத்துடன், 'கோயிலுக்கு வந்து....இதைக் கேக்கறீங்களா, புத்தி இருக்கா” என பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மன அமைதி வேண்டி சாமி கும்பிடச் சென்றவரிடம் இப்படி கேள்வி கேட்கலாமா என அந்த நிருபரை பலரும் திட்டி வருகிறார்கள்.