தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா உலகில் சில இரண்டாம் பாகப் படங்கள் சில பல சிக்கல்களால் சிக்கிக் கொண்டிருக்கிறது என நேற்று தான் செய்தி வெளியிட்டோம். அதில் ஒரு படத்திற்கான விடிவுகாலம் என்னவென்பதை அதன் தயாரிப்பாளரும், ஹீரோவுமான விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிக்க லண்டனில் ஆரம்பமான படம் துப்பறிவாளன் 2. அங்கு ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்ததும் படத்தின் இயக்குனர் மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். பெரும் சர்ச்சையான அந்த விவகாரம் அப்படியே முடங்கிப் போய் படமும் முடங்கி இருந்தது.
சமீபத்திய பேட்டியில் இப்படத்தை 2022ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் விஷால். முன்னர் சொன்னபடி படத்தை அவரே இயக்கப் போகிறாராம், இசையும் இளையராஜாதான் எனக் கூறியிருக்கிறார்.
லண்டனில் காலையில் படப்பிடிப்பை லேட்டாக ஆரம்பித்து ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே மிஷ்கின் எடுத்து தனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ச்சை அடங்கிப் போயிருந்த இந்த விவகாரம் விஷாலின் பேட்டியால் மீண்டும் சர்ச்சைகளை வரவக்கும் என்றே தெரிகிறது.