விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதி மும்பையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வாலின் திருமணம் முடிந்த மறுநாள், நடிகை அனுஷ்கா, காஜலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். “இந்த பூமியில் அதிகபட்ச மகிழ்ச்சி என்பது திருமணத்தின் மகிழ்ச்சிதான். இரண்டு மனங்கள் ஒரே எண்ணங்களுடன், இரண்டு இதயங்கள் ஒரே அசைவுடன்... காஜல், கவுதம் இருவருக்கும் மகிழ்ச்சியான திருமண நல்வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அந்த திருமண வாழ்த்திற்கு சுமார் ஆறு மாத காலம் கழித்து 'ஹார்ட்டின்' மட்டும் பதிவிட்டு பதிலளித்துள்ளார் காஜல். “குழந்தை பெற்ற பிறகு எதற்குப் பதிலளிக்க வேண்டும்,” என ஒரு ரசிகர் அதற்கு கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார்.
அனுஷ்காவின் டுவீட்டை இப்போது தான் காஜல் அகர்வால் பார்த்துள்ளாரா அல்லது பதிலளிக்க மறந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், எந்த கமெண்ட்டுகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. காஜலின் பதிலுக்கும் அனுஷ்கா வேறு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.