டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த ஆண்டில் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், திருமணத்திற்கும் பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். தனது சினிமா பயணம் இன்னும் எத்தனை ஆண்டுகள் வரை தொடரும் என்பது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛தற்போது என் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இதில், 2018ல் இந்தியன்-2விலும், 2019ல் ஆச்சார்யாவிலும் கமிட்டானேன். இந்த படங்கள் இரண்டுமே கொரோனா தொற்றினால் இன்னும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து துல்கர்சல்மானுடன் ஹேய் சினாமிகா மற்றும் நாகார்ஜூனாவுடன் ஒரு படம், தமிழில் டிகே இயக்கும் படம் என பல படங்களில் கமிட்டாகியுள்ளேன். அந்தவகையில் இப்போதுவரை எனது சினிமா பயணம் பிசியாகவே போய்க்கொண்டிருக்கிறது.
எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் புதிய படங்களிலும் கமிட்டாகி வருகிறேன். ஆனால் இந்த பயணம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும் என்பது எனக்கே தெரியவில்லை. கணவர் அனுமதி கொடுப்பதுவரை நடிப்பேன். அவர் எப்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்த சொல்கிறாரோ அப்போது நிறுத்தி விடுவேன். அதனால் எனது சினிமா கேரியர் கைவசம் உள்ள படங்களோடு முடிவடைகிறதா? இல்லை தொடரப்போகிறதா? என்பது என் கணவர் கையில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளர் காஜல் அகர்வால்.