ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வருட காலமாக கட்டுப்படுத்த முடியாமல் மக்களைத் திண்டாட வைத்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் நவம்பர் மாதம் திறக்கப்பட்ட போது குறைவான மக்கள் வருகையால் திண்டாடியது.
பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கைகளில் வசூலைக் குவித்தது. அதன்பின் மீண்டும் மக்கள் வருகை குறையவே தியேட்டர்காரர்கள் திண்டாடினர். வாரத்திற்கு வாரம் படங்கள் வெளிவந்தாலும் மக்கள் வராத காரணத்தால் அடிக்கடி காட்சிகளை ரத்து செய்யும் நிலை எற்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் வெளிவந்தது. நேற்று தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் இரு விதமான விமர்சனங்கள் வந்தாலும் அவற்றையும் மீறி மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதாகத் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
'கர்ணன்' படம் நேற்று வெளிவந்தாலும் கடந்த வாரம் வெளியான 'சுல்தான்' படம் இந்த வாரத்திலும் தியேட்டர்களில் தொடர்கிறது. இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் தாக்கம் எப்படியிருக்கப் போகிறது என்பது இனிமேல் தான் தெரியும். இருந்தாலும் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் தப்பித்துவிடும் என்கிறார்கள்.