இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிக்க ஆரம்பமான படம் 'துப்பறிவாளன் 2'. இப்படத்தின் ஒரு கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. அதன்பின் படத்தின் இயக்குனர் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் மிஷ்வின் படத்தை விட்டு விலகினார். அதன்பின் படத்தை தானே இயக்க விஷால் முடிவு செய்தார். ஆனால், அதன்பின் படத்திற்காக எந்தவிதமான படப்பிடிப்பும் நடக்கவில்லை.
மாறாக விஷால் 'சக்ரா' படத்தில் நடித்து முடித்து படத்தை வெளியிட்டார். அப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'எனிமி' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அவருடைய 31வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் அவர், 'துப்பறிவாளன் 2' படத்தைக் கைவிட்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரே இயக்குவது வேலைப்பளுவைத் தான் தரும்.
விஷாலின் அடுத்த வெளியீடாக 'எனிமி' படம் தான் வரும். அதற்கடுத்து அவரின் 31வது படம் வரும். அதற்குப் பிறகு 'துப்பறிவாளன் 2' படத்தை அவர் மீண்டும் ஆரம்பிக்க மாட்டார் என்றே கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.