600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாளை வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கார்த்தி, ராஷ்மிகா, தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், 'தோழா' பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, “சுல்தான்' படத்தில் நடிக்கும் போது மிகவும் ஜாலியாக இருந்தது. ஆனாலும், தமிழில் எனது அறிமுகப்படம் என்பதால் கொஞ்சம் உற்சாகமாகவும், பயமாகவும் உள்ளது. இப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது. ஏப்ரல் 5ம் தேதி எனது பிறந்தநாள். 'சுல்தான்' வெற்றிதான் எனது பிறந்த நாள் பரிசாக அமையும்,” எனப் பேசினார்.
அந்த பிறந்தநாளை பரிசை ரசிகர்கள் தருவார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.