ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கொலை கொலயாக முந்திரிக்கா, வல்லமை தாராயோ, மூணே மூணு வார்த்தை படங்களை இயக்கிய மதுமிதா அடுத்து இயக்கிய படம் கேடி என்கிற கருப்புதுரை. வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஒரு முதியவரின் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் ஒரு சிறுவனின் கதை.
இந்த படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் நிறைய விருதுகள் எதிர்பார்தேன். இது ஏமாற்றம் அளிக்கிறது என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‛‛கேடி என்கிற கருப்புதுரையின் பயணம் இனிமையானது. அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் நன்றி. தேசிய விருதுகளில் இன்னும் கூடுதலான விருதுகளை பெறாததில் எங்களுக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் அது அப்பட்டமான பொய். ஏனென்றால் எல்லா அம்மாக்களுக்கும் அவர்கள் குழந்தைகள் தகுதியானவர்கள் தான்'' என்று எழுதியிருக்கிறார்.