டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அசோக் செல்வன் பிசியான நடிகர் ஆகிவிட்டார். மலையாளத்தில் உருவாகி வரும் சரித்திரபடமான மரைக்காயரில் நடித்துள்ளார். இதுதவிர 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படம் தீனி. இதனை அனி ஐ.வி.சசி இயக்குகிறார். அசோக் செல்வனுடன் நித்யாமேனன், ரிது வர்மா நடிக்கிறார்கள். ஸ்ரீ வெங்டேஸ்வரா சினி சித்ரா, ஜீ ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. திவாகர் மணி ஒளிப்பதிவு செய்கிறார், ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குன் அனி ஐ.வி.சசி கூறியதாவது: இது உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படம் . அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. என்றார்.