தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ்குமார் மலையாளத்தில் பிரபலமான ஒரு தயாரிப்பாளர். சிறு வயதில் தன் அப்பா தயாரித்த சில படங்களில் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திலும், தனது அப்பாவின் தயாரிப்பிலும் 'வாஷி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
அது பற்றி கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளதாவது, “நீங்கள் நினைப்பதைவிட என் மனதிற்கு நெருக்கமான ஒரு படம். ஒரு பெண் குழந்தையாக, அப்பாவின் தயாரிப்பில் நடிப்பது சுலபம் என நினைத்துவிடலாம், ஆனால் எதுவும் சுலபமாக வருவதில்லை.
எனது சிறு வயது நண்பர் விஷ்ணு ராகவ் இந்த முறை என்னுடன் எனது இயக்குனராகப் பணிபுரிகிறார். எனது அபிமான மற்றும் சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி,” என கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் 'அண்ணாத்த, சாணிக் காயிதம்' படத்திலும், தெலுங்கில் 'ரங் தே, சரக்கு வாரி பாட்டா, அய்னா இஷ்டம் நுவ்வு' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 'குட் லக் சகி' தெலுங்குப் படத்திலும், 'மரைக்கார்' மலையாளப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.