தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துருவங்கள் பதினாறு, நரகாசூரன், மாபியா படங்களை அடுத்து தற்போது தனுஷின் 43வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன். இவற்றில் நரகாசூரன் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. அருண் விஜய்-பிரசன்னா நடிப்பில் வெளியான மாபியா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் தனுஷின் 43வது படத்தை எப்படியாவது ஹிட் படமாக்கி விடவேண்டும் என்று கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்திக் நரேன். அதன்காரணமாக, இப்படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற மலையாளத்தில் வைரஸ் உள்பட பல படங்களுக்கு கதை எழுதிய சர்பு மற்றும் சுகாஷ் ஆகியோரை இப்படத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் கார்த்திக் நரேன்.