பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2007-2008ம் நிதி ஆண்டில் தனது வருமானத்திற்கு சேவை வரி கட்டவில்லை என்று கூறி ஜிஎஸ்டி வரி ஆணையம் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் இரு வங்கி கணக்குகளை முடக்கியதோடு, ஒரு வங்கி கணக்கில் இருந்து 40 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டது. இதுகுறித்து மகேஷ்பாபு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜி.எஸ்.டி ஆணையரக அறிக்கையின்படி கடந்த 2007-2008ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடராக இருந்து பெற்ற வருமானத்திற்கு சேவை வரி கட்டவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் சேவை வரிக்குள் பிராண்ட் அம்பாசிடர் பணி கொண்டு வரப்படவில்லை 2010ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது வங்கி கணக்கை முடக்கியது தவறு. வங்கி கணக்கு முடக்கம் குறித்த விவகாரத்தில் வரி செலுத்துவோருக்கு ஆதரவான விதிமுறைகள் இருக்கும்போது, எந்த முன் அறிவிப்பும் இன்றி ஜிஎஸ்டி ஆணையரகம் வங்கி கணக்கை முடக்கி உள்ளது. இந்த பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.