இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் முடிவடைந்த நிலையில் வருடக்கணக்கில் முடங்கிக்கிடக்கிறது. இந்நிலையில் அமிதாப்பச்சனுடன் இணைந்து, 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான 'கள்வனின் காதலி' மற்றும் ஜீவன் நடித்த 'மச்சக்காரன்', அகில் நடித்த 'நந்தி' ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இப்படம் குறித்து அதன்பிறகு எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படம் குறித்து இப்போது ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
அதாவது தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்க இருக்கிறது. இயக்குனர் தமிழ்வாணன், எஸ்.ஜே.சூர்யா இருவரும் சமீபத்தில் அமிதாப்பச்சனை சந்தித்து பேசியுள்ளனர். அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படமான இப்படத்தை சுரேஷ் கண்ணனின் 'திருச்செந்தூர் முருகண் புரொடக்ஷன்ஸ்' நிறுவனமும், பைவ் எலிமென்ட்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
சிவாஜி நடிப்பில், ஏவி.எம்.நிறுவனம் தயாரித்த படம் தான் 'உயந்த மனிதன்'. எனவே அந்நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற்று இப்படத்திற்கு அந்த டைட்டிலை சூட்டியுள்ளனர்.