டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் சேதுபதியின் 25வது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் சீதக்காதி. இதில் அவர் 87 வயது முதியவராக நடித்திருப்பதால் இன்னும் ஆர்வம் அதிகமா இருந்தது. ஆனால் படம் வெளிவந்த பிறகு அதில் விஜய்சேதுபதி முதல் 40 நிமிடம் மட்டுமே நடித்திருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொதுவாக ஒரு கலைஞன் தனக்கு ஏற்படும் எண்ணத்தை கலையின் மூலமாகத்தான் சொல்வான் என்பார்கள். அப்படி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரனோட நன்றிக் கடன் தான் சீதக்காதி படம். வாய்ப்பு கொடுத்த பாலாஜி தரணிதரனுக்கு நன்றி.
இந்தப் படத்தில் முதல் 40 நிமிடம் தான் வருவேன். அப்படி இருந்தும் ஏன் இதனை எனது 25வது படம், என்னுடைய படம் என்பதற்கு காரணம் அதில் நான் நடித்துள்ள அய்யா கேரக்டர். அய்யாவின் கலை, ஆன்மா பற்றிய படம். எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து ஆதரவு கொடுங்க. உலகத்தில் எங்கேயோ இருக்கிற உங்களையும், எங்கேயோ இருக்கிற என்னையும் இணைக்கிற கலைக்கு நன்றி.