இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த படம் அவன் இவன். இதில் விஷால், ஆர்யா, ஜனனி நடித்திருந்தார்கள். இதில் சிங்கம்பட்டி ஜமீனாக இயக்குனர் ஜி.எம்.குமார் நடித்திருந்தார். ஜமீனுக்கு உட்பட்ட சொரிமுத்து அய்யனார் கோவில் தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருந்தது.
படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குடும்பமும், சொரிமுத்து அய்யனார் கோவிலும் அவதூறு செய்யப்பட்டிருப்பதாக சிங்கம்பட்டி ஜமீனின் தற்போதைய வாரிசுகள் சங்கர் ஆத்மஜன் மற்றும் முத்துராமன் ஆகியோர் அம்பை குற்றவியல் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இயக்குனர் பாலா, நடிகர்கள் ஆர்யா, விஷால் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். பல ஆண்டுகளாக நடந்த வரும் இந்த வழக்கில் இயக்குனர் பாலா ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார். கடந்த மாதம் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டதும் பாலா ஆஜரானார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலா மட்டும் ஆஜரானார். இதனால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4ந் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அப்போது பாலா, விஷால், ஆர்யா ஆகிய மூவரும் ஆஜராக உத்தரவிட்டார். ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் ஏற்கெனவே பிடிவாரண்டு பிறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.