இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய்பல்லவி, விஜய் இயக்கிய 'கரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப்படத்தைத் தொடர்ந்து சாய் பல்லவி, தமிழில் நடித்துள்ள படம் 'மாரி-2'.
தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் 'ஆராத்து ஆனந்தி' என்ற ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்த படம் வருகிற 21-ஆம் தேதி வெளியாகிறது. இதே நாளில் சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள படி படி லெச்சு மனசு (Padi Padi Leche Manasu') என்ற படமும் வெளியாகிறது. ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஏற்கெனவே சாய் பல்லவி நடித்த 'பிடா' என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில்தான் சாய் பல்லவி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.
'மாரி-2' படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் சூர்யாவின் 'NGK' வெளியாக இருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் வெற்றியடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சாய்பல்லவியை தற்போது தேடிவரும் தயாரிப்பாளர்களிடம் பெரிய சம்பளம் கேட்கிறாராம்.