தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை சாய்பல்லவி. அதன்பின்பு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா என்கிற படத்தின் மூலம் தமிழில் நுழைந்த சாய் பல்லவிக்கு, அந்த படம் அவ்வளவாக வரவேற்பு கொடுக்க வில்லை
இந்த நிலையில் மாரி-2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்த படத்தில் அவருக்கு ஆட்டோ டிரைவர் வேடம், இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில், நடிகர் ரோபோ சங்கர் சாய்பல்லவி பற்றி பேசும்போது, இந்த படம் வெளியான பின்பு அனைவரும் சாய்பல்லவியை 'பொம்பள தல' என அழைப்பார்கள் என்று பட்டம் கொடுத்து கலாட்டா செய்தார். அதைவிட ரோபோ சங்கர் அப்படி பேசியபோது அவர் தன்னைத் தான் குறிப்பிடுகிறார் என சாய் பல்லவி தன்னை அறியாமலேயே தலையை நிமிர்த்தி பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.