‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணங்களை வழங்கிய நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், மூன்றாம் கட்டமாக கொடைக்கானலில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
கொடைக்கானில், குருசரடி, பெருமாள் மலை, கோரன் கொம்பு, மங்களக்கொம்பு, குரங்கனிப்பாறை, கடைசிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனம் மூலமும், சில இடங்களில் நடந்து சென்றும் பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பல ஊர்களில் நிவாரணமும் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கமல், எங்கள் கொள்கையே சென்ட்ரிசம், மக்களுக்கு எது நல்லது, எது நியாயம் என்று படுகிறதோ அதை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அது மட்டும் தான் எங்களுடையே ஒரே கொள்கை. மக்களின் பிரச்சனைகளை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். மக்களின் பிரச்னைகள் மிக முக்கியமானதாக இருக்கிறது. கருணாநிதிக்கு மரியாதை செலுத்துவதற்கு எனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.