பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை தமன்னா நடிகர் சிரஞ்சீவியுடன், தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். சைரா நரசிம்ம ரெட்டி அந்த படத்தின் படபிடிப்புக்கு மத்தியில், தமன்னா அளித்த பேட்டி :
எனக்குப் பிடித்த, பிடிக்காத நடிகைகள் அவ்வளவு பேரின் படங்களையும் நான் ரசித்தே பார்ப்பேன். ஒவ்வொருவரிடம் இருந்தும், குறைந்தபட்சம் ஒரு நல்ல விஷயத்தையாவது பார்ப்பேன். அதை பின்பற்ற வேண்டும் என நினைப்பேன். அதற்காக, இந்த நடிகை போல நாம் வர வேண்டும் என, ஒரு நாளும் நினைத்ததில்லை.
நான் நானாகத்தான் எந்நாளும் இருக்க வேண்டும். அதே போலத்தான் மற்றவர்களும் இருக்க வேண்டும். ஒரு நாளும் தமன்னா மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. ஒவ்வொருவரும், தங்களுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி, தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழிலில் முழு கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றினால், வெற்றி நிச்சயம் தேடி வரும்.
என்னுடைய லட்சக்கணக்கான ரசிகர்கள், என்னுடைய ஒவ்வொரு படமும் நன்றாக ஓட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர். அவர்களுக்கு நான் கடமைபட்டுள்ளேன். நான், ஒரு நாளும் அழுது வடியும் கேரக்டரில் நடிக்க விரும்பியது கிடையாது. சந்தோஷமாக இருக்கும் கேரக்டர்தான் எனக்குப் பிடிக்கும்.
இவ்வாறு தமன்னா பேட்டியில் கூறியுள்ளார்.