ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அஜித்துடன் 'விஸ்வாசம்', விஜய்யுடன் 'தளபதி 63', ராஜேஷ் இயத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் 'சயீரா நரசிம்மரெட்டி', மேலும் ஒரு படம் என கை நிறைய படங்ககளை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா.
இதற்கிடையில், நாயகிக்கே முக்கியத்துவம் உள்ள 'ஐரா' மற்றும் 'கொலையுதிர் காலம்' படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இதில், 'ஐரா' படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடிப்பதில் இயக்குநர் ஆர்வம் காட்டுவதில்லை என, நடிகை நயன்தாரா கோபம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சர்ஜுன் இந்தப் படத்தை, வேகமாக எடுக்கவில்லை என்ற வருத்தம் நயன்தாராவுக்கு இருக்கிறது. அதை படத் தயாரிப்புக் குழுவிடம் நயன்தாரா ஓபனாக சொல்லி விட்டாராம்.