கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
வேலு பிலிம்ஸ் சார்பில் ஐசரி வேலன் தயாரிக்கும் படம் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு. எம்.ஜி.ஆர், உலகம் சுற்றும் வாலிபன் படத்தை இயக்கி வெளியிட்டபோது, அந்த படத்தின் இறுதியில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாக தலைப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று குறிப்பிட்டார். அதன்பிறகு, அவர் அரசியலில் தீவிரமாகிவிட்டதால் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு படம் உருவாகவில்லை.
இந்தநிலையில், எம்.ஜி.ஆரின் நண்பரான ஜசரி வேலனின் மகன் ஜசரி கணேஷ், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற பெயரில் எம்.ஜி.ஆர் உருவத்தை பயன்படுத்தி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாரித்து வருகிறார். இந்தப்படத்திற்கு தடை கேட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் சக்கரவர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் "கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தான் தயாரிக்க முடிவு செய்து படத்தின் தலைப்பை பதிவு செய்திருந்தேன். தற்போது அந்தப் படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ், அந்த தலைப்பை என்னிடம் இருந்து வாங்கினார். தற்போது அந்த படம் முடிவடைந்து வெளிவர இருக்கிறது. ஆனால் படத்தின் கதை நான் உருவாக்கி வைத்திருந்த கதையல்ல. நான் சொன்ன கதையை படமாக்காமல் வேறு கதையை படமாக்கி இருப்பதால் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க கூடாது" என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. "இது உயர்நீதிமன்ற விசாரணைக்கு உகந்ததல்ல மனுதாரார் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் முறையிட்டு தீர்வு காணலாம்" என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.