பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் தவம். புதுமுகம் வசி என்பவர் தயாரித்து, நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார். இவர்களுடன் போஸ் வெங்கட், சிங்கம் புலி, சந்தான பாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, செங்கல் ராவ், அர்ச்சனா சிங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆனந்த், சூரியன் என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள். படம் பற்றி அவர்கள் கூறியதாவது:
கதையின் நாயகி தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் மகனின் திருமணத்திற்காக 7 நாள் சுற்றுலா பயணமாக காரைக்குடி வருகிறாள். கதையின் நாயகன் காரைக்குடியில் ஏ டூ இசட் என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும், டூரிஸ்ட் கைடாகவும் இருக்கிறார். ஏழை விவசாயிகளின் வறுமையும் போக்க போராடும் நடேசன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் சீமான் நடித்திருக்கிறார். கதாநாயகன், கதாநாயகி, நடேசன் வாத்தியார் இவர்கள் மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதை.
வேர்வை, உழைப்பு, கண்ணீர், அதனால் ஏற்படும் இரத்தம் மற்றும் காதலால் பின்னப்பட்டிருக்கிறது படத்தின் திரைக்கதை. விவசாயத்தின் இன்றைய நிலயையும், விவசாயிகளின் வலியையும் பேசுகிற படம். படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது, பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்கள்.