தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதியுடன் ஒவ்வொரு வாரமும் படங்கள் ரிலீஸாகி வருகின்றன. சமீபகாலமாக இதில் கடும் குழப்பம் நிலவுகிறது. கவுன்சில் ஒப்புதல் இன்றி படங்களை வெளியிடுவதாக தேவையில்லாத குழப்பங்கள் வருகின்றன.
வருகிற டிச.,21ம் தேதி ஜெயம்ரவியின் அடங்கமறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், விஜய் சேதுபதியின் சீதக்காதி, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால் திடீரென தனுஷின் மாரி 2, உள்ளே நுழைந்ததால் பிரச்னை உருவானது.
இதுதொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படாததால் தயாரிப்பாளர்கள் சங்கம் டிச.,21 மற்றும் ஜன.,10ம் தேதிகளில் தயாரிப்பாளர்கள் விருப்பம்போல் படங்களை ரிலீஸ் செய்யலாம் என அறிவித்தது. இதனால் இதுநாள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்த விதிமுறைகள் எல்லாம் வீணாகி உள்ளன.
இதுபற்றி விஷ்ணு விஷால் தனது ஆதங்கத்தை டுவிட்டர் வாயிலாக தெரிவித்திருக்கிறார். அவர், "விதிமுறைகள், விதிகள் இன்மை, விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு இப்படித்தான் நீதி வழங்கப்படுமா? இது முதன்முறையல்ல, எனக்கு இரண்டாவது முறையாக நடக்கிறது. பிறகு எதற்கு விதிகள்? சிஸ்டம் தோற்றுவிட்டது. உள்குத்து அரசியல். டிசம்பர் 21-ல் சிலுக்குவார்பட்டி சிங்கம் வெளியாகிறது.
கடந்த ஒரு மாதத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்ற வகையில் சொல்கிறேன். இந்த பிரச்னைக்கு எல்லாம் விஷால் காரணமல்ல. ஏற்கனவே சொன்னது போன்று உள்குத்து அரசியல் மட்டுமே. விதிமுறைகள் எல்லாம் அதை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே.
இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.