தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஐதராபாத்தில், கச்சிபௌலி என்ற இடத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற 7 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டரை இன்று(டிச., 2) திறந்துள்ளார். ஆசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் முதலீடு செய்திருக்கிறார் மகேஷ்பாபு.
மாலை முதல் அங்கு படங்கள் திரையிடப்பட்டன. 2.0 படத்தின் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன. தியேட்டரை பல திரைப்பிரபலங்கள் சில நாட்கள் முன்னதாகவே பார்வையிட்டு பாராட்டி உள்ளார்கள்.
தியேட்டரின் திறப்பு விழா தெலுங்குத் திரையுலகின் பல பிரபலங்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. மொத்த நிகழ்வையும் தன்னுடைய யு டியூப் சேனலில் இடம் பெற வைத்துள்ளார் மகேஷ் பாபு.
7 தியேட்டர்களில் 1600 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வசதியும், 3டி திரையிடல், டால்பி அட்மாஸ்பியர் ஒலி அமைப்பு என சர்வதேச தரத்தில் தியேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்க வசதியாக கோல்டு டிக்கெட் கட்டணத்தை 200 ரூபாயும், பிளாட்டினம் டிக்கெட் கட்டணம் 300 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளார்கள்.
ஐதராபாத்தின் புதிய அடையாளமாக இனி எஎம்பி சினிமாஸும் இருக்கும் என தெலுங்குத் திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.