'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, வேதாரண்யம், பட்டுகோட்டை போன்ற பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் புயலால் பாதித்த இடங்களுக்கு சென்ற நடிகர் பிரஷாந்த், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்த செய்தி வெளியில் தெரியவில்லை. ரசிகர் ஒருவர் போட்டோ வெளியிட்டதன் மூலமே இந்த செய்தி தெரியவந்துள்ளது. மேலும் அங்கு இரவு பகலாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்களுடன் பிரஷாந்த் விரும்பி புகைப்படமும் எடுத்து கொண்டார்.