இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
எம்.ஆர்.பாரதி இயக்கும் படம் அழியாத கோலங்கள் 2. பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:
பாலுமகேந்திராவின் நினைவை போற்றும் வகையில் தான் இந்தப் படத்திற்கு அழிகாத கோலங்கள் 2 என்று பெயர் வைத்திருக்கிறோம். மற்றபடி அவர் இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் கதைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இது ஒரு வங்காள படத்தின் முறையான ரீமேக்.
சாகித்ய அகடாமி பெற்ற ஒரு எழுத்தாளினின் கதை. விருதை பெற்ற கையோடு தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் பழைய காதலியை சந்திக்க செல்கிறார் எழுத்தாளர். அந்த ஒரு இரவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. வங்கமொழியில் பல விருதுகளை பெற்ற படம்.
இதில் எழுத்தாளராக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரேவதியும், காதலியாக அர்ச்சனாவும் நடித்திருக்கிறார்கள். நாசர் போலீஸ் அதிகாரியாகவும், ஈஸ்வரிராவ் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது. என்றார்.