'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு சர்ச்சைகள் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் விஜய்யின் சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி உள்ள திமிரு புடிச்சவன் படமும் கதை திருட்டில் சிக்கி உள்ளது.
கிரைம் நாவல் மன்னன் என பெயரெடுத்த எழுத்தாளர் ராஜேஷ் குமார், திமிரு புடிச்சவன் பட கதை என்னுடையது என கூறியுள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது :
“கடந்தாண்டு, 'ஒன் + ஒன் = ஜீரோ' தொடர் கதையின் அடிப்படைக் கருவான, 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை ப்ரைன் வாஷ் செய்து, தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கின்றனர் என்பது பற்றி எழுதி இருந்தேன். அந்தக் கருவை அப்படியே காப்பியடித்து 'திமிரு புடிச்சவன்' திரைப்படத்தை எடுத்துள்ளனர். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜேஷ் குமார்.
இந்தப் பதிவுக்குக் கீழே, அவருக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.