கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா. பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வில் உரிய மார்க் எடுக்க முடியாததால் மருத்துவம் படிக்க முடியாமல் போனது. அந்த கவலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அனிதாவின் கதையை ஆர்.ஜே.பிக்சர்ஸ் என்ற நிறுவனம், டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் படம் எடுக்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கியது. அனிதாவாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி நடிக்கிறார் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது. அஜய் குமார் என்பவர் தயாரித்து, இயக்குவதாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில், அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு திரைப்படம் எடுக்கவோ, அது தொடர்பாக விளம்பரம் செய்யவோ தடை விதிக்க வேண்டும் என்று அனிதாவின் தந்தை டி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி பெறாமல் அறிவிப்புகளை வெளியிட்டதற்காக 25 லட்சம் இழப்பீடு கேட்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான அஜய் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வருகிற 22ந் தேதி தள்ளி வைத்தது.