'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் மகேஷ் பாபு. அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. அவற்றில் சில படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் மாபெரும் வெற்றிப் படங்களாகி உள்ளன.
தமிழில் உள்ள நடிகர்கள் சம்பாதித்த பணத்தில் திருமண மண்டபங்கள் தான் கட்டுவார்கள். ஆனால், தெலுங்கில் உள்ள நடிகர்கள் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வார்கள். தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு, ஐதராபாத்தில் ஹை கிளாஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை ஆசியன் நிறுவனத்துடன் இணைந்து கட்டியிருக்கிறார். எஎம்பி சினிமாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த தியேட்டர் தீபாவளியன்றே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆமீர்கான் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' படத்தை முதலிலி வெளியிட்டு ஆமீர்கானையே தியேட்டர் திறப்பு விழாவுக்கும் அழைக்கலாம் என மகேஷ்பாபு நினைத்திருந்தாராம். ஆனால், ஆமீர்கான் அந்தப்பட பிரமோஷனுக்காக ஐதராபாத் வரவில்லை.
எனவே, அடுத்து ஒரு பெரிய படத்தின் மூலம் தியேட்டரைத் திறக்க மகேஷ்பாபு முடிவு செய்துள்ளாராம். இந்த மாதம் 29ம் தேதி வெளியாக உள்ள ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படம் மூலம் தன் தியேட்டரைத் திறக்க விருப்பப்படுகிறார் மகேஷ் பாபு. முதல் படமே பெரிய படமாக இருக்க வேண்டும் என்பதுதான் மகேஷ் பாபுவின் ஆசை.
நல்ல வேளை அவர் 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' படத்துடன் தியேட்டரைத் திறக்கவில்லை. இல்லையென்றால் ஒரு தோல்விப் படத்துடன் அவர் தியேட்டர் ஆரம்பமாகியிருக்கும் என்று கோலிவுட்டினர் கிசுகிசுக்கிறார்கள்.