பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கில் பாகுபலி போன்று, தமிழில் 2.0 போன்று, மலையாளத்தில் காயங்குளம் கொச்சுண்ணி போன்று கன்னடத்தில் உருவாகி உள்ள பெரிய பட்ஜெட் படம் கே.ஜி.எப். 80 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள முதல் கன்னடப் படம். இது ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இதனை ஹம்பிள் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிர்கந்தூர் தயாரித்துள்ளார். யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, வசிஸ்டா என்.சிம்கா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்சுர் இசை அமைத்துள்ளார், புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். பல விருகளை பெற்ற உகரம் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். டிசம்பர் 21ந் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் விஷால் வாங்கி வெளியிடுகிறார். இதற்கான நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது.
விழாவில் விஷால் பேசியதாவது: கன்னட சினிமாவின் வியாபார எல்லை விரிவடைந்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் படம் தயாராக தொடங்கி உள்ளது. இது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி. இந்தப் படத்தை தமிழில் வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன். பாகுபலி உலக அளவில் சாதனை படைத்தது போன்று இந்தப் படமும் சானை படைக்கும் என்று நம்புகிறேன். என்றார்.