தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் உறியடி. படம் வெற்றி பெறாவிட்டாலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. கல்லூரிகளுக்குள் நடக்கும் ஜாதி மோதலை பற்றிய படம். விஜயகுமார் என்ற புதுமுகம் இயக்கி, தயாரித்து நடித்திருந்தார். அதன்பிறகு விஜயகுமாருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் விஜயகுமார் சூர்யாவிடம் உறியடி படத்தை போட்டுக்காட்டி அதன் இரண்டாம் பாக கதையை சொன்னார். அது சூர்யாவுக்கு பிடித்து விடவே இரண்டாம் பாகத்தை, தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்க முன்வந்தார். உறியடி 2-ம் பாகத்திலும் விஜய குமாரே இயக்கி நடித்துள்ளார், மலையாள நடிகை வம்சயா இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கோவிந்த் வசந்த் இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தென்காசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. 36 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் விஜயகுமார். சிறிய பட்ஜெட், குறுகியகால படப்பிடிப்பு, திட்டமிட்ட செயல்பாடு இவற்றை சூர்யா பாராட்டி உள்ளார். டப்பிங் மற்றம் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் அடுத்த வாரத்தில் இருந்து தொடங்குகிறது. டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.