தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
நகைச்சுவை நடிகராக கோலோச்சிக் கொண்டிருந்த சந்தானத்திற்கு தனக்குப் பின் விஜய் டிவிக்கு வந்த சிவகார்த்திகேயன், சினிமாவில் ஹீரோவாக ஜெயித்ததை பார்த்துவிட்டு, தானும் ஹீரோவாக நடிப்பேன் என்று அடம் பிடித்தார். ஆனால், அவர் நாயகனாக நடித்த சில படங்களே தற்போது நின்று போய்விட்டன.
எப்போதே வெளிவர வேண்டிய 'சர்வர் சுந்தரம்' பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் வெளியாகவில்லை. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'ஓடி ஓடி உழைக்கணும்', ஒரு கட்டத்தில் ஓடாமல் நின்றுவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் ஆரம்பமான 'மன்னவன் வந்தானடி' அப்படியே தடுமாறி நிற்கிறது. செல்வராகவன், சூர்யா நடிக்கும் 'என்ஜிகே' படத்தை இயக்கப் போய்விட்டார். இந்தப் படங்கள் தன்னை மீட்டெடுக்காது என்று நினைத்த சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போய்விட்டார். நேற்று அப்படத்தின் முதல் பார்வையும் வெளியானது.
அதோடு, நேற்று அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றையும் ஆரம்பித்துவிட்டார். நடித்து நின்று போயிருக்கும் படங்களுக்கு முன்பாக 'தில்லுக்கு துட்டு 2' படத்தை வெளியிடும் முயற்சியில் சந்தானம் இருக்கிறாராம். முதல் பாகத்தைப் போலவே இந்தப் படம் 'துட்டு' வசூல் செய்து தன்னைக் காப்பாற்றும் என நினைக்கிறாராம்.