டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல தெலுங்கு நடிகை சஞ்சனா கல்ராணி. கன்ட ஹெண்டதி என்ற படத்தில் நடித்தபோது உடன் நடித்த நடிகருக்கு 50 முறை முத்தமிடச் சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியிருந்தார். இந்தப் படத்தின் இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா நேற்று இதுகுறித்து பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியில் வெளியான மர்டர் என்ற படத்தின் ரீமேக்தான் கன்ட ஹண்டதி. இந்தியில் மல்லிகா ஷெராவத் துணிச்சலுடன் முத்தக் காட்சியில் நடித்திருப்பார். அந்த காட்சி தான் படத்திற்கு பலம். இதை சஞ்சனாவிடம் கூறி. அந்தப் படத்தின் சிடியை பார்க்க கொடுத்து அதன் பிறகே ஒப்பந்தம் போட்டோம். அதன்படிதான் முத்தக் காட்சி எடுத்தோம். ஒரு காட்சியில் சரியாக நடிக்க வராவிட்டால் ரீடேக் எடுப்பது சர்வசாதாரணமானது. அவர் சரியாக நடிக்கவில்லை. அதனால் பல ரீடேக் போனது. ஆனால் அவர் சொன்னது போல் 50 முறையெல்லாம் இல்லை.
இந்தி மர்டரில் இருந்த பல காட்சிகளை சஞ்சனாவுக்காக மாற்றி அமைத்து எடுத்தோம். இரண்டு படங்களையும் பார்த்தால் நாங்கள் அவரை எவ்வளவு மென்மையாக கையாண்டிருக்கிறோம் என்பது தெரியும். அந்த படத்தின் வெற்றிதான் அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தது. அப்போது வாய்ப்புக்காக ஒப்புக்கொண்டு, நடித்து விட்டு இப்போது வளர்ந்த பிறகு எங்கள் மீது புகார் சொல்கிறார். தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் இருக்கும் அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே இந்த குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். என்றார்.