தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி தற்போது பேட்ட படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். 4 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் அவர் பேரன்களுடன் பொழுதை கழித்து வருகிறார். நேற்று தனது பேரன் வேத் கிருஷ்ணாவுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வேத் கிருஷ்ணா தாத்தாவிடம் ஆட்டோவில் போக வேண்டும் என்கிற தன் ஆசையை கூறியிருக்கிறான்.
உடனே ரஜினி தன் கார் டிரைவர் மூலம் ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் அவரும், பேரனும், மகள் சவுந்தர்யாவும் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஆழ்வார் பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றனர். பேரன் வேத் வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவதை ரசித்தபடி ரஜினி சென்றுள்ளார். அவர்களின் பாதுகாப்பிற்காக காரில் பாதுகாவலர்கள் பின் தொடர்ந்துள்ளனர். ஆட்டோவில் ரஜினி குடும்பத்துடன் பயணிப்பதை பொது மக்கள் சிலர் கண்டுபிடித்து அவரை பார்த்து கை அசைத்தனர். ரஜினியும் பதிலுக்கு கை அசைத்தார்.