ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரட்டைச்சுழி படத்தை இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் ஆண் தேவதை. சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ளனர். அகமது பக்ருதீன் என்பவர் தயாரித்துள்ளார். படத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்காமல் 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போனது. தற்போது ஒரு வழியாக இன்று வெளியாகி உள்ளது.
ஆண் தேவதைக்கு கடைசி நேரத்திலும் சிக்கல் ஏற்பட்டது. படத்துக்கு தடைவிதிக்க கோரி நிஜாம் முகைதீன் என்பவர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் "ஆண் தேவதை படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் அகமது பக்ருதீன் என்னிடம் 37 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதில் 15 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதமுள்ள 22 லட்சத்தை படம் வெளியிடுவதற்கு முன்பு தந்து விடுவதாக சொன்னார். ஆனால் எனக்கு பணத்தை தராமலேயே படத்தை வெளியிடுகிறார். அதனால் எனக்கு பணத்தை தரும் வரையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் அகமது பக்ருதீன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டது. அதன்படி தயாரிப்பாளர் தனது விளக்கத்தை அளித்ததை தொடர்ந்தும் இருதரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்தும் படம் இன்று வெளியானது.