பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணி, கடந்த 2016ம் ஆண்டு தனது சாலக்குடி பண்ணை வீட்டில் மது அருந்திய நிலையில் மர்மமான முறையில் இறந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டாக வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் கலாபவன் மணியின் வாழ்க்கையை மையமாக வைத்து அவரது நண்பரான இயக்குனர் வினயன், சாலக்குடிகாரன் சங்காதி என்ற படத்தை இயக்கி அது தற்போது வெளிவந்துள்ளது.
வழக்கு நடந்து வரும் நிலையில் கலாபவன் மணி விஷம் வைத்து கொல்லப்பட்டது உண்மை என்பதுபோன்று படத்தில் காட்சிகள் இருந்ததால் இதுகுறித்து நேரில் விளக்கம் அளிக்குமாறு வினயனுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து இயக்குனர் வினயன் நேற்று சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் இதுகுறித்து வினயன் கூறியதாது: கலாபவன் மணி மரணம் குறித்து என்னிடம் விசாரணை நடத்தினர். நான் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் படத்தில் காட்சிகள் வைத்ததாக சொன்னேன். மேலும் மணியின் மரணம் குறித்து எனக்கு தெரிந்த சில தகவல்களை சொன்னேன். அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். என்றார்.