பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
முகவரி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட் துரை. சில மாதங்களுக்கு முன்னர் இவர் இயக்கிய ஏமாலி படம் வெளியானது. சமுத்திரகனி, அதுல்யா ரவி நடித்த இந்தப்படம் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அடுத்தப்படியாக இருட்டு என்ற படத்தை இயக்குகிறார். சுந்தர்.சி, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக, போலீஸாக நடிக்கிறார். கிரிஷ் இசையமைக்கிறார். இந்திரா சௌந்தர்ராஜன் வசனம் எழுத, ஸ்க்ரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் திகில் படமாக உருவாகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
தற்போது சுந்தர் சி, சிம்புவை வைத்து 'அத்தரண்டிகி தாரேதி' தெலுங்கு படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறார்.