டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படம், அடுத்த வாரம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக இத்தனை ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் இவர்கள் நான்கு பேரும் தான் இந்தப் படத்தின் ஹீரோக்கள். படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது அரவிந்த்சாமி மூத்த அண்ணன், அவருக்கு அடுத்து அருண் விஜய், சிம்பு ஆகியோர் போலத் தெரிகிறது. விஜய் சேதுபதி அரவிந்த்சாமியின் நண்பராக, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இன்று வெளியாகியுள்ள இரண்டாவது டிரைலரில் பெரியவரு போயிட்டாருன்னா யாருக்குப் பெரிய லாபம் என சிம்பு கேட்கிறார். அரவிந்த்சாமியிடம் ஒரு பெண் சேனாபதிக்கு அடுத்த வாரிசு வரதராஜன்தானா, உன் தம்பிங்க எனக் கேட்கிறார். அடுத்த காட்சியில் அரவிந்த்சாமி, தியாகுவும், வைத்தியும், ரொம்பவே கேர்புல்லா இருக்கணும்,” என்கிறார். பின்னர் சிம்பு, டேய், அண்ணா இதை ஆரம்பிச்சி வச்சது நீ மறந்துடாத,” என்று எச்சரிக்கிறார்.
துப்பாக்கி, ரத்தம், அடிதடி என பெயருக்கு ஏற்பவே சிவந்த மாதிரி இருக்கும் இரண்டாவது டிரைலரின் காட்சிகள், இந்தப் படத்தில் யாருக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என்ற ஆவலை இப்போதே தூண்டியுள்ளது. சேனாபதிக்குப் பின் யார் வாரிசு ?, இதுதான் செக்கச் சிவந்த வானம் ?.