ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2. இதனை காமெடி நடிகர் மனோபாலா தயாரித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு மனோபாலா 1 கோடியே 79 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார். இந்த பாக்கியை வசூலித்து தரும்படி அரவிந்த்சாமி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மனோபாலா, படம் வெளியீட்டுக்கு முன்பு சம்பள பாக்கியை கொடுத்து விடுவதாகவும் முதல்கட்டமாக அக்டோபர் 10ம் தேதிக்குள் 25 லட்சம் கொடுப்பதாகவும், நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் படத்தை வெளியிட மாட்டேன். என்று உத்தரவாதம் அளித்தார்.
மனோபாலாவின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அக்டோபர் 12ந் தேதி, இருதரப்பினரும் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் சம்பள பிரச்சினை பற்றி பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.