ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஜய்சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர் நடிக்க மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்கச் சிவந்த வானம்' வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சில பிரச்சனைகள் இருந்தன.
அவை தீர்க்கப்பட்டதை அடுத்து 27-ஆம் தேதி உலகம் முழுக்க படம் வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. இதற்கிடையில் 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு சென்சாரில் 'யு/ஏ' சான்று வழங்கியிருக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான 'ஓகே கண்மணி' படத்தில் லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றி சொல்லப்பட்டதால் அப்படத்துக்கு சென்சாரில் 'யு/ஏ' வழங்கப்பட்டது. 'காற்று வெளியிடை' படத்துக்கு 'யு' சான்று கிடைத்தது.
இப்போது 'ஓகே கண்மணி'யைப்போலவே 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு 'யு/ஏ' சான்று வழங்கப்பட்டது ஏன்? அடல்ட் கண்டன்ட் டைப்பான காட்சிகள் படத்தில் துளியும் இல்லையாம். ஆனால் வன்முறைக்காட்சிகள் அதிகம் இருப்பதால்தான் 'யு/ஏ' கிடைத்துள்ளது என்று படத்துறையில் சொல்லப்படுகிறது.