ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு தற்போது காமராஜர் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தொடர்ச்சியாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படம் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் தயாராகி வருகிறது. இதனை ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களான பேட் மேன், ஸ்பைடர் மேன் பாணியில் எம்.ஜி.ஆரை சூப்பர் ஹீரோவாக மாற்றி என் ஐ என்ற நவீன தொழில் நுட்பத்தில் உருவாக பிரமாண்ட படம் உருவாக இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், மலேயா உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை பி.வாசு இயக்குகிறார். ஆரஞ்ச் கவுண்டி என்ற மலேசிய நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயலாளர் டத்தோ மார்கழி பனி, தொழில்நுட்ப அதிகாரி விமலநாதன் ஆகியோர் கூறியதாவது:
மலேசியாவின் சர்வதேச ஊடக தொழிற்நுட்ப நிறுவனமாக எங்கள் ஆரஞ்ச் கவுண்டி செயல்பட்டு வருகிறது. எங்களின் கண்டுபிடிப்புதான் என் பேஸ் என்கிற நவீன தொழில்நுட்பம். இது அனிமேஷன் தொழில் நுட்பம் அல்ல. நிஜமான தோற்றத்தை அதி நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்குவதாகும். இத்தொழிற்நுட்பத்தை கொண்டு கடந்த கால கதாபாத்திரங்களை உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளோம்.
எங்கள் நிறுவனமும், முன்னணி சர்வதேச ஹாலிவுட் வி.எப்.எக்ஸ் தொழிற்நுட்ப வல்லுனர்களும் இணைந்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை, ஒரு சர்வதேச திரைப்படத்தின் மூலமாக மக்கள் முன் மீண்டும் உயிரோட்டமாக காட்சிப்படுத்த இருக்கிறோம். இதனை பி.வாசு இயக்குகிறார். இயக்குனர் வாசுவின் தந்தை, எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்மையான அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், இயக்குனர் வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது. அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம்.
கதை களமும், கதாபாத்திரங்களும் முறையே மலேசியாவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய, பிராந்திய மற்றும் சர்வதேச நடிக-நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்குபெற இருக்கிறார்கள். சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது. இத்திரைப்படம் முழுவதுமே 3டி முறையில் தயாரிக்கப்படுவதாலும், ஒவ்வொரு காட்சியுமே 3டியில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாலும், இது மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும். இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமாராக 500 கோடி வரை செலவாகலாம். ஆனால் அதனை அறுதியிட்டு கூற இயலாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.