பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
சமீபத்தில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை விஜய் சேதுபதி தயாரித்திருந்தார், லெனின் பாரதி இயக்கி இருந்தார். தற்போது இதே பாணியில் மரகதகாடு என்ற படம் தயாராகி உள்ளது.
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ என்ற புதுமுகங்களுடன் மலைப் பகுதி மக்களே நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இயக்கி உள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். ஜெய் பிரகாஷ் இசை அமைத்துள்ளார், நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் மங்களேஸ்வரன் கூறியதாவது:
காடுகளை அழித்து காட்டு மக்களை அங்கிருந்து விரட்டியடித்து காட்டை சுடுகாடாக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான படம் இது. காட்டு மக்களை அவர்கள் விருப்பம்போல் அவர்கள் இடத்தில் வாழ அனுமதிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தும் படம். தற்போது காட்டு மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை ஒரு நிஜ சம்பவத்தின் பின்னணில் சொல்கிறோம். ஒரு சிலரைத் தவிர மற்ற கதை மாந்தர்கள் அனைவருமே காட்டு மக்களே. அடர்ந்த காடுகளில், காட்டு மக்களோடு தங்கி, அவர்கள் கொடுத்த உணவையே உண்டு வாழ்ந்து படமாக்கி இருக்கிறோம். கர்ணம் தப்பினால் மரணம் என்கிற அளவிற்கான பள்ளத்தாக்குகள், பாய்ந்தோடும் காட்டாறுகள் இவற்றில் உயிரை பணயம் வைத்து படமாக்கி உள்ளோம். என்றார்.