ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் காலா. நிலம் எங்கள் உரிமை என உரக்க சொன்னது இப்படம். எட்டு வழிச்சாலைக்கு விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி வரும் வேலைகளை செய்து வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத்திய பிரதமர் அலுவலகமும், சட்ட அமைச்சகமும் இணைந்து நாட்டில் உள்ள மாஜிஸ்திரேட்கள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரும் காலா படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். நிலம் இல்லாதவர்களின் துயரத்தை நீதிபதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? என்பது தெரியவில்லை.