கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான அடல்ட் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த இந்தப்படத்தில் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர்.
கடந்த மே மாதம் வெளியான இந்தப் படம், ஆபாசப்படமாக இருந்ததால் பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு எதிராகப் பலரும் போர்க்கொடி தூக்கினர். அதேசமயம், இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதோடு, நல்ல லாபத்தையும் தந்தது.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தைத் தொடர்ந்து 'கஜினிகாந்த்' என்ற படத்தை இயக்கினார் சந்தோஷ் பி ஜெயக்குமார். 'கஜினிகாந்த்' வணிக ரீதியில் தோல்வியடைந்தது. இந்நிலையில், 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யப்போகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
ஆதித் அருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவே தயாரிக்கிறார்.