'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், டயானா இரப்பா என ஒரு டஜன் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் செக்கச்சிவந்த வானம். இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்புவுக்கு ஜோடியாக டயானாவும் நடித்துள்ளனர். செக்கச்சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமிக்கு மட்டும் இரண்டு ஜோடிகள். ஜோதிகா மற்றும் அதிதி ராவ் இருவரும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல சிம்பு, அருண்விஜய் ஏற்றுள்ள வேடங்களைவிட அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தை அதிரடியான கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.
விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள செக்கச்சிவந்த வானம் படம் செப்டம்பர் 28-ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படம், தெலுங்கில் நவாப் என்ற பெயரில் வெளியாகிறது.