பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் சினிமாவில் நாயகியர் பஞ்சம் நிறையவே இருக்கிறது. தெலுங்கிலிருந்தோ, ஹிந்தியிலிருந்தோ, மலையாளத்திலிருந்தோ வரும் ஒரு நாயகியின் படம் ஹிட்டானால், அடுத்தடுத்து அவரைத் தேடி பல வாய்ப்புகள் வரும். ஆனால், தமிழில் நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெறுவது சாதாரண விஷயமில்லை.
அப்படி தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே பல வாய்ப்புகளைப் பெற்ற நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்தார். அந்த வரிசையில் தற்போது ராஷி கண்ணாவும் இடம் பிடித்துவிட்டார்.
தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, தமிழில் சித்தார்த் நடிக்கும் 'சைத்தான் கா பச்சா' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மெதுவாக நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து அவர் நடிக்க ஒப்பந்தம் ஆன, 'இமைக்கா நொடிகள்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அந்தப் படம் வெளிவருவதற்குள்ளாகவே ஜெயம் ரவி ஜோடியாக 'அடங்க மறு' படத்தில் நடித்து வருகிறார் ராஷி. இப்போது விஷால் ஜோடியாக 'அயோக்யா' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தமிழில் 'ர' வரிசை நாயகிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். சமீபத்திய ஹிட் நாயகி ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ராஷி கண்ணா சரியான போட்டி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.