‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கேரளா வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளும், அது சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. அதில், நடிகர்கள் பிருத்விராஜ், இந்திரஜித் ஆகியோரின் அம்மா நடிகை மல்லிகா சுகுமாரன், ஒரு பெரிய அண்டாவில் வைத்து வெள்ளநீரில் காப்பாற்றப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அதே சமயம், சில மாதங்களுக்கு முன்பு மல்லிகா சுகுமாரன் அவர் வசிக்கும் திருவனந்தபுரம் வீட்டுக்குச் செல்லும் சாலைகள் தன் மகன் பிருத்விராஜின் லம்போர்கினி கார் வர வசதியாக இல்லை என்று சொன்னதை இப்போது பெரிய சர்ச்சைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். சாலைகள் சரியாக இல்லாததால் அந்த காருடன் மகன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவர் அப்போது பேசியிருக்கிறார். அந்த விஷயத்தையும், தற்போது அண்டாவில் அவர் காப்பாற்றப்பட்டதையும் சேர்த்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
இந்த சர்ச்சைக்கு மல்லிகா சுகுமாரன், “என்னைவிட வயதான, பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை யாரும் புகைப்படம் எடுத்துப் போடவில்லை,” என்று பதிலளித்திருக்கிறார்.
எவ்வளவு வசதியிருந்தாலும் இயற்கைக்கு முன் அனைவரும் சமம் என்பதை இப்படிப்பட்ட இயற்கை சீற்றங்கள்தான் புரிய வைக்கின்றன என்பதே பலரது கருத்தாக உள்ளது.